லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் துறை அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஜல்சக்தி துறை இணை அமைச்சர் காதிக் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருப்பவர் காதிக். தனது துறை அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதாக காதிக் குற்றம்சாட்டி உள்ளார். தன்னை ஒருவரும் மதிப்பது இல்லை என்றும், அதிகாரிகள் புறக்கணிப்பதால் அரசு பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.