டெல்லி: டெல்லியில் சிசிடிவி கேமரா உள்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய 1,397 டிஜிட்டல் பேருந்து நிறுத்தங்களை அமைக்க ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 35 லட்சம் பயணிகள் பயனடையவுள்ள நிலையில் பேருந்துகள் எப்போது பேருந்து நிறுத்தத்திற்க்கு வரும், அதன் பயண நேரம், சேறும் இடம் உட்பட பல தகவல்களை டிஜிட்டல் திரையில் பயணிகள் அறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அவசர காலப் பொத்தான், சிசிடிவி கேமரா உட்பட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு கண்கானிப்பு மேற்கொள்ளப்படுகிறது.