கவுகாத்தி: வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசமும், அசாம் மாநிலமும் 804 கிமீ துார எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமானது. அப்போது, பழங்குடியினருக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்கள் ஒருதலைப்பட்சமாக அசாமுக்கு மாற்றப்பட்டது. பின்னர், 1987ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்றதும் அமைக்கப்பட்ட முத்தரப்பு கமிட்டி அசாமின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் அருணாச்சல பிரதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.