திண்டுக்கல் : திண்டுக்கல் பள்ளப்பட்டி ஊராட்சி 11வது வார்டில் உள்ள அந்தோணியார் கோயில் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக கழிவுநீர் ஓடைகள் தூர்வாராமல் கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் பெருகி தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.