சென்னை: ஆபாச படத்தை வெளியிடுவேன் என கானா பாடல் பாடியபடியே இளம்பெண்ணை மிரட்டிய கானா இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 29 வயது பெண் நேற்று முன்தினம் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், புளியந்தோப்பை சேர்ந்த சபேஷ் சாலமன் (35) என்ற கானா பாடல் இசையமைப்பாளர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யூ-டியூப்பில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். மேலும் சபேஷின் தந்தை செல்வகுமாரும் அவருக்கு உடந்தையாக இருந்து எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.