தேனி: சொத்து மதிப்பீடுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தாசில்தாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தேனி கோர்ட் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2011ல் தாசில்தாராக இருந்தவர் நாகராஜ் (52). இவரிடம், கண்டமனூர் அருகே ஆத்தாங்கரைபட்டியை சேர்ந்த கொத்தாளமுத்து, தனது மகளுக்கு சொத்து மதிப்பீடு கேட்டு அணுகினார். இதற்கு தாசில்தார் நாகராஜ் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து கொத்தாளமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.