சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி, அரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு, அந்த சிசுவுடன் அதன் பாட்டி, தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு தெருநாய், குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது. அதை யாருமே கவனிக்கவில்லை.