திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்: திருச்சி சிவா எம்பி பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நேற்று மாலை திமுக இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி என்.சிவா எம்பி பங்கேற்று பேசினார். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக இளைஞரணி சார்பில் நேற்று மாலை கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏஆர்டி.உதயசூரியன், துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், ஜெ.மோகன்பாபு, கி.வே.ஆனந்தகுமார், எம்.முரளிதரன், ஆர்.தில்லைகுமார் ஆகியோர் வரவேற்றனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, டி.கே.சந்திரசேகர், ஆ.சத்தியவேலு, ரவி, மணிபாலன், அப்துல் ரஷீத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா எம்பி, நாஞ்சில் சம்பத், மாநில இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

 மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஏ.வி.ராமமூர்த்தி, தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், கன்னிகை ஸ்டாலின், வழக்கறிஞர்கள் சீனிவாசன், முனுசாமி, டி.கே.முனிவேல், பா.செ.குணசேகரன், அபிராமி குமரவேல், சங்கர், பேரூராட்சி துணை தலைவர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: