ரூ.20 லட்சம் கேட்டு அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார். நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று காலை அவரது வீட்டின் மீது மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில் வீட்டின் முதல்மாடியில் உள்ள சுவர் தீப்பிடித்து கருகியது. சத்துவாச்சாரி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அடகு கடைக்காரரிடம் பிரபல ரவுடி பேசுவதாக கூறி, ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த ரவுடி தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதனால் சிறையில் இருந்தே அவர் போன் செய்தாரா? என விசாரிக்கிறோம், பணம் கொடுக்காததால், மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் என்றனர்.

Related Stories: