துறையூர் : துறையூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிக்கத்தம்பூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (53) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தண்டலைப்புத்தூரில் உள்ள தனது மகள் சௌந்தர்யா வீட்டிற்கு மனைவி சரோஜாவுடன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.