பட்டா வழங்கியதில் முறைகேடு பெண் விஏஓ, தலையாரி சஸ்பெண்ட்

தேவகோட்டை:  இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், விஏஓ, தலையாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மேலச்செம்மன்மாரி குரூப் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ராஜலட்சுமி. இவர் கடந்த மே மாதம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த தலையாரி கருப்பனின் மனைவி முத்து முருகேஸ்வரி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.  

இதுகுறித்து புகார் எழுந்ததால் தலையாரி  கருப்பன், செலுகைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்தார். நேற்று விஏஓ ராஜலட்சுமியை, கோட்டாட்சியர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதேபோல் தலையாரி  கருப்பனை, வட்டாட்சியர் அந்தோணிராஜ் சஸ்பெண்ட் செய்தார்.

Related Stories: