தேவகோட்டை: இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், விஏஓ, தலையாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மேலச்செம்மன்மாரி குரூப் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ராஜலட்சுமி. இவர் கடந்த மே மாதம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த தலையாரி கருப்பனின் மனைவி முத்து முருகேஸ்வரி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.