திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மீன் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரசாயனம் கலந்த கெட்டுப்போன மீன்கள் கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதனால் கேரள மாநில எல்லைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். நேற்று அதிகாலை தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.