மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த விக்ரம் (24), என்பவர் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டு கடைசி வரை வாழ்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை, நம்பிய மாணவி அந்த வாலிபருடன் நெருங்கி பழகி உள்ளார். இதனை பயன்படுத்தி, விக்ரம் மாணவியிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், 2 மாதம் கர்ப்பம் அடைந்தார்.