ஆபாச படத்தை காட்டி மிரட்டி பெண் போலீசிடம் பணம் பறிப்பு: ரயில்வே ஊழியர் கைது

திருச்சி: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வருகிறார். இவரது உறவினர் லால்குடி திருமணமேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின்(40). ரயில்வே ஊழியரான இவர், திருவெறும்பூரில் உள்ள ரயில்வே காலனியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண் போலீசுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்டாலின் நெருங்கி பழகி வந்தார்.அப்போது பெண் போலீசை நிர்வாண நிலையில்  அவர் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி, பெண் போலீசுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததுடன், கடந்த 20ம் தேதி அவரை மிரட்டி ரூ.20 ஆயிரம் பறித்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண் போலீஸ் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பான புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பெண்ணை மானபங்க படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்தார். பின்னர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்டாலினை, வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: