திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கல்லூரியில் மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகத் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (21). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பார்மசி கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். பின்னர் கொரோனா தொற்று அதிகரித்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் சொந்த மாவட்டத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று தனது நண்பரான நசரத்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருடன் கல்லூரிக்கு வந்து டி.சி. யை (மாற்றுச் சான்றிதழை) கேட்டு விண்ணப்பித்துள்ளார். அடுத்த வாரம் வரும்படி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.