ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (27). இவர், சிவன் கூடல் சாலை சந்திப்பில் உள்ள ஐயனார் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.