ராஞ்சி: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில், ஹீரோவை 2 பெண்கள் காதலிப்பார்கள். 2 பேரையும் ஹீரோ உயிருக்கு உயிராக காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார். ஆனால் ஒரே வீட்டில் ஒரே கணவருடன் 2 பெண்கள் குடும்பம் நடத்த முடியாது எனக் கூறி, 2 ஹீரோயின்களும் ஹீரோவை விட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்திலேயே நடந்துள்ளது. ஒரே ஒரு வித்தியாசம். அதில் 2 பெண்களும் ஒரு சேர காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்கடாவில் உள்ள பாந்த்ரா தொகுதி பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். கூலித் தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்தார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்ததால், திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது சந்தீப் வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது.