பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு எதிரொலியாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தின் மாண்டி பகுதியில் திடீரென நேற்று மேகவெடிப்பு நிகழ்ந்து பெருமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து பேருந்து நிலையம் அருகே சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண், அப்பகுதியில் உள்ள கடைகளையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றையும் மூடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். லாரி மண்ணுக்குள் புதையுண்டு ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.