இந்தியா போராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல!: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்…டெல்லி ஐகோர்ட் ஆணை..!! Jun 15, 2021 தில்லி தில்லி உயர் நீதிமன்றம் தில்லி ஐகார்ட் ஆணை தின மலர் டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மூவருக்கு ஜாமீன் வழங்கியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், போராட்டங்களில் பங்கேற்பது தீவிரவாத நடவடிக்கை ஆகாது என தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷப் டான்கா ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ள போராட்டத்திற்கான உரிமை மற்றும் தீவிரவாத நடவடிக்கை ஆகியவற்றிற்கான வேறுபாடு தெளிவின்றி புரிந்துக் கொள்ளப்படுவதாகவும் இது ஜனநாயகத்தில் கவலைக்குரிய அம்சமாக உள்ளதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. … The post போராட்டம் நடத்துவது தீவிரவாதம் அல்ல!: சி.ஏ.ஏ. போராட்டத்தின் போது உபா சட்டத்தில் கைதான 3 பேருக்கு ஜாமீன்…டெல்லி ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.
சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்
லிப்ட் கம்பி அறுந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிய 14 அதிகாரிகள் மீட்பு: தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பலி
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!!
மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீடிப்பு
பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?: உச்சநீதிமன்றம் காட்டம்!!
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்