பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து தையல் இயந்திரம், சில்வர் குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 500 பேருக்கு அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.