வாட்ஸ்அப் குழுவில் பெண்களை இணைத்து ‘கால் பாய்’யாக செயல்பட்டது அம்பலம்

கைது செய்யப்பட்ட விக்ரம் வேதகிரியிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:சென்னை திருநின்றவூர் அன்னை இந்திரா நகர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்ரம் வேதகிரி. பட்டதாரியான இவர், அனிதாவை போல் பல இளம்பெண்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ‘பின்னணி குரல் கலைஞர்கள்’ குழு மூலம் தன்வசப்படுத்தியுள்ளார். முதலில் நட்பாக பழனி பிறகு காதலர் தினத்தன்று அந்த பெண்ணிடம் பேஸ்புக் லைவ் மூலம் தனது காதலை தெரிவிப்பார். பிறகு ஒவ்வொரு நாளும் சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் மற்றும் குறிப்பாக கணவரால் கைவிடப்பட்ட மற்றும் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து காதல் கவிதைகள் அனுப்பி தன்னை காதலிக்க வைப்பார். அதை நம்பி விக்ரம் காதலை ஏற்றுக்கொண்ட பெண்களை ஏமாற்றி சுற்றுலா என அழைத்து சென்று நட்சத்திர ஓட்டல் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்டில் தங்கவைத்து ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்படி வெளியில் தங்கும் போது, தன்னுடன் வந்த இளம்பெண்களுக்கு தெரியாமல் படுக்கை அறையில் கேமராக்கள் பொருத்தி அதை வீடியோ எடுத்து வந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விடுவேன். இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்து வந்துள்ளார். அவர்களும் தங்கள் குடும்ப கவுரவத்தை  கருத்தில் கொண்டு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகுவைத்து கேட்ட பணத்தை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பேஸ்புக் மூலம் பழக்கமான மும்பையை சேர்ந்த விவாகரத்தான பெண்ணை ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வைத்து பணம் பறித்துள்ளார். இதுபோல் 10க்கும் மேற்பட்ட விவாகரத்தான பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வேலை செய்யும் இளம்பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். ஆபாச இணையதளத்தின் நிர்வாண படங்களுக்கு ‘ஆபாச மீம்ஸ்’ பதிவு செய்து வந்துள்ளார். மாடலிங் பெண்களுடன் நிர்வாண புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளார். அந்த படங்களுக்கு ஆபாச இணையதள பதிவில் மீம்ஸ் பதிவு செய்து வந்துள்ளார்.மேலும், ஆபாச இணையதளத்தில் விக்ரம் என்ற பெயரில் ‘மனைவியுடன் முதல் அனுபவம்’ என பல தலைப்புகளில் ஆபாச கதைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் ெதாடர் கதை போல் எழுதி வந்துள்ளார். ஆபாச வெப் சீரியல் கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்து வந்துள்ளார். தன்னுடன் ஆபாச வீடியோவில் நடிக்க அழகான பெண்களை அவர் அணுகியுள்ளார். இதுதவிர, தனது செல்போனில் ‘அக்கா உறவுமுறை மட்டும்’ என்ற தலைப்பில் தனியாக வாட்ஸ் அப் குழு தொடங்கி வசதியான குடும்ப பெண்களை இந்த குழுவில் சேர்த்துள்ளார். பிறகு அந்த வாட்ஸ் அப் குழுவில் ‘யாருக்காவது அழகான கட்டுடல் ஆண் மகன் தேவைப்படுகிறதா’ என்று கேட்டு விக்ரம் ‘கால் பாய்’யாகவும் இருந்து வந்ததும் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: