கைது செய்யப்பட்ட விக்ரம் வேதகிரியிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:சென்னை திருநின்றவூர் அன்னை இந்திரா நகர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் விக்ரம் வேதகிரி. பட்டதாரியான இவர், அனிதாவை போல் பல இளம்பெண்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ‘பின்னணி குரல் கலைஞர்கள்’ குழு மூலம் தன்வசப்படுத்தியுள்ளார். முதலில் நட்பாக பழனி பிறகு காதலர் தினத்தன்று அந்த பெண்ணிடம் பேஸ்புக் லைவ் மூலம் தனது காதலை தெரிவிப்பார். பிறகு ஒவ்வொரு நாளும் சம்பந்தப்பட்ட இளம்பெண்கள் மற்றும் குறிப்பாக கணவரால் கைவிடப்பட்ட மற்றும் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து காதல் கவிதைகள் அனுப்பி தன்னை காதலிக்க வைப்பார். அதை நம்பி விக்ரம் காதலை ஏற்றுக்கொண்ட பெண்களை ஏமாற்றி சுற்றுலா என அழைத்து சென்று நட்சத்திர ஓட்டல் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்டில் தங்கவைத்து ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்படி வெளியில் தங்கும் போது, தன்னுடன் வந்த இளம்பெண்களுக்கு தெரியாமல் படுக்கை அறையில் கேமராக்கள் பொருத்தி அதை வீடியோ எடுத்து வந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விடுவேன். இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்து வந்துள்ளார். அவர்களும் தங்கள் குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகுவைத்து கேட்ட பணத்தை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.