*கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், ஜூன் 27ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.383.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது (கடந்த ஆண்டை விட 11.1 சதவீதம் அதிகம்). ஒற்றையர் பிரிவுகளில் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ19 கோடி கிடைக்கும். கத்தாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட ஏற்கனவே 30 அணிகள் தகுதி பெற்றிருந்தன. எஞசிய 2 இடங்களுக்கான போட்டியில் ஆஸ்திரேலியா - பெரு, நியூசிலாந்து - கோஸ்டாரிகா மோதின. ஆஸி. - பெரு இடையிலான ஆட்டம் 0-0 என டிராவில் முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் ஆஸி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று 31வது அணியாக முன்னேறியது. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தாமஸ் பிரட்ரிக் (47 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான தாமஸ் ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். பல்வேறு அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தபோது நடந்த 75 ஆட்டங்களில் 50 வெற்றிகளை பெற்றுள்ளார் (15 டிரா). சிறந்த பயிற்சியாளர் விருதையும் பெற்றுள்ளார்.