புல்வாமா: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள திராத்கம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இது தரப்பினர் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நீடித்தது.