புதுக்கோட்டை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவிற்கும் - அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானாலும் அவர் செல்லட்டும்; இங்கு அவருக்கு இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.