பாஜகவினர் அழைத்தால் அங்கு செல்லட்டும்!: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.. மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி..!!

புதுக்கோட்டை: சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவிற்கும் - அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானாலும் அவர் செல்லட்டும்; இங்கு அவருக்கு இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் பொதுக்குழு தீர்மானமே அதிகாரபூர்வமானது என்றும் சசிகலாவை பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை எனவும் கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்று தெரிவித்த நத்தம் விஸ்வநாதன், அதிமுக மட்டுமே தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என குறிப்பிட்டார். பாஜகவினர் கூறிய சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. காலம் வரும்போது மக்கள் உரியவர்களை தேர்ந்தெடுப்பார்கள் எனவும் நத்தம் விஸ்வநாதன் சாடினார்.

Related Stories: