டெல்லி: ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பை அதிகரிக்க உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு வசதியாக ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும் ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது. இதற்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம், ஆப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது, பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.