சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சீக்கியர்களின் புனித வழிபாட்டு தலமாகும். கடந்த 1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.