ஆத்தூர்: ஆத்தூர் அருகே மைனர் பெண் திருமணத்தை அதிமுக எம்எல்ஏ நடத்தி வைத்த நிலையில் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று அங்குள்ள கோயிலில் அதிமுக ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கோபி ஆகியோர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிலையில், மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைத்ததாக தகவல் வெளியானது. இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதன்பேரில், ஆத்தூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.