புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களையும், அப்பாவி மக்களையும் தீவிரவாதிகள் கொலை செய்து வரும் நிலையில், பாஜ தனது எட்டு ஆண்டு நிறைவை கொண்டாடுவதா? என ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ‘காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களில் 15 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும், 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, தற்போது கூட ஒரு ஆசிரியை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.