உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ரூ. 1.43 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க, க.சுந்தர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். உத்திரமேரூர் அடுத்த சிறுபினாயூர் - வடபாதி கிராமம் செல்லும் சாலையின் நடுவே பழுதடைந்த தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மழைக் காலங்களில் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த, பழுதான பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் க.சுந்தர் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.