கம்பம்: அகத்தியர் தீவு அருகே 220 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கடல் மார்க்கமாக போதை பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அகத்தியர் தீவு அருகே வந்த இரு மீன்பிடி படகுகளை சோதனை செய்தனர். அந்த படகுகளில் 220 கிலோ ஹெராயின் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.