புதுடெல்லி: ‘ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில் பாஜ உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஒன்றியத்தில் பதவியேற்று பாஜ அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது. உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. சேவை, நல்லாட்சி, ஏழைகளுக்கான நல திட்டங்கள் ஆகியவற்றுக்கு அரசு பாடுபட்டு வந்தது. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு நிறைவு செய்யும் விதமாக இருந்தது. நாட்டின் சமச்சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கு 8 ஆண்டுகளும் அர்ப்பணிக்கப்பட்டது.