சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்மழையால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 29,072 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்றுமுன் தினம் காலை 108.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 111.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.28 அடி உயர்ந்துள்ளது.