வீட்டை உடைத்து 40 சவரன் கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நடராஜன் (63).  இவருக்கு  சென்னை தரமணியில்  சொந்தமாக வீடு உள்ளது. அங்கு மராமத்து வேலைகள்  நடக்கின்றன. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் நடராஜன், குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று மாலை செங்கல்பட்டு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு  உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது,  பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த  40 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: