திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மான் தோல் மற்றும் மான் கொம்பு, நரி பல் வைத்திருந்த ஜோதிடரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மான்தோல், நரி பல், ஆமை ஓடு உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் மான்தோல், மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் வனத்துறையினர் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள ரெட்டியபட்டிக்கு சென்று வீடு வீடாக சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மான்தோல், மான் கொம்பு, நரிபல், ஆமை ஓடு ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.