வானூர்: வானூர் அருகே கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் வவ்வால்களின் சரணாலயமாக திகழ்ந்த 250 ஆண்டுகால ஆல மரம் மழையில் வேரோடு சாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கழுப்பெரும்பாக்கம் கிராமம், கழுவெளி அருகே அமைந்துள்ள ஊர் ஆகும். இக்கிராமத்தின் முக்கிய சாலையின் அருகே சுமார் 250 ஆண்டுகால ஆலமரம் இருந்தது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் தங்கி இருந்தன. இதனால் இந்த கிராமத்தில் தீபாவளி மற்றும் முக்கிய விழாக்களில் பட்டாசு வெடிப்பது இல்லை. மேலும் விழா காலங்களில் மேளதாளங்கள் இசைப்பதும் இல்லை.