திருவள்ளூர்: வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினை ஒருங்கிணைத்து உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் பெறலாம். இதில் பயன்பெற 8ம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவராகவும் இருப்பது அவசியம். கடனுதவி பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு கிடையாது. தனிநபர் தொழில் முனைவோர்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிகுழுக்கள், அறக்கட்டளைகள் ஆகியோரும் பயன் பெறலாம். பொது பிரிவினர் நகர் புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் திட்ட மதிப்பீட்டில் 15 சதவிதம் மானியமும், ஊரக பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.