டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான செய்திகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதியுடன் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளநிலையில், வருகிற நம்பவர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மீண்டும் அங்கு ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜக கட்சி, கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு கூட்டங்களை கூட்டி பாஜக வருகிறது.