காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவரும் உயிரிழந்தார். இந்த மோதலில் ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து காஷ்மீர் மண்டல ஐஜி விஜய் குமார் கூறுகையில், ‘சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியை சுற்றிவளைத்த போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.