சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை சிபிசிஐடி நேற்று கைது செய்தது.