சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என கூறினார். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை +2 தேர்வும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வும் தொடங்க உள்ளது.