புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜவை சேர்ந்த புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தபோதிலும் முதல்வராக கட்சி மேலிடம் அவரை நியமித்தது. இதனை தொடர்ந்து 6 மாதங்களில் அவர் சட்டமன்ற உறுப்பினராவது கட்டாயமாகும். இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் உத்தரகாண்ட் சம்பவாத் சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.