பாட்னா: போஜ்புரி நடிகரின் மனைவி, மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல போஜ்புரி நடிகர் கேசரி லால் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் போலீஸ் டிஜிபி சிங்கால் ஆகியோருக்கு, சமூக வலைதளம் விடுத்துள்ள கோரிக்கையில், ‘என் மனைவி மற்றும் மகளை பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் விடுத்த நபர், காவி உடை அணிந்திருந்தார். அவர் மிக மோசமான வார்த்தைகளால் என்னையும், மனைவி மற்றும் மகளை திட்டினார். பீகார் அரசிடம் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.