கோத்தகிரி: கோத்தகிரியில் டானிங்டன் முத்துமாரியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு வருடாந்திர திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று புதூர் தண்ணீர் பாலத்தில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டானிங்டன் விநாயகர் கோயிலில் இருந்து பறவைக்காவடி, பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல் நடைபெற்று டானிங்டன் பிரதான வீதி வழியாக ஊர்வலமாக அம்மன் கோயில் வந்தடைந்து.