ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறியதாவது: நான் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாறியிருக்கலாம், ஆனால் நான் முன்பை விட மனரீதியாக வலுவாக இருக்கிறேன். தோல்வியை கண்டு நான் இப்போது பயப்படவில்லை. ரஸ்சலின் விக்கெட்டை திட்டம் வகுத்து வீழ்த்தியது எனக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு சிறந்த ஐபிஎல் சீசன். நான் எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். சரியான லைன் மற்றும் லென்த் பந்துவீசுவதிலேயே எனது கவனம் இருந்தது.