திருச்சி: அரசியல் பிரவேசத்தில் கூட்டணியா? பொறுத்திருந்து பாருங்கள் என திருச்சியில் சசிகலா தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சசிகலா சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய, சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். பின்னர் காரில் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.