மதுரை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று அளித்த பேட்டி:
ஜெயலலிதா விரும்பி சென்று வந்த இடம் கொடநாடு. இங்கு நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சி என்பதற்காக எல்லாவற்றிலும் ஆளுங்கட்சியை குறை சொல்ல வேண்டியதில்லை. முசிறியில் சசிகலா வருகைக்காக அமமுக நிர்வாகிகள், அதிமுக பேனர் மற்றும் கொடிகளை வைத்து வரவேற்ற நிலையில் அவர்கள் நீக்கப்பட்டனர். அது சசிகலாவை வரவேற்றதற்காக நீக்கவில்லை. அதிமுகவை மீட்டெடுத்து, சசிகலாவை அதன் பொதுச்செயலாளராக அமர்த்துவோம்.