சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லென் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா நடைமுறைகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படுவதாக கூறினார். ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்காக தேதி ஒதுக்கப்படும்.