திருப்பூர்: திருப்பூரில் மதம் மாற வற்புறுத்துவதாக ஆசிரியை மீது மாணவி ஒருவர் போலீசில் புகார் செய்தார். திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவரின் 12 வயது மகள் திருப்பூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வகுப்பு ஆசிரியை ஒருவர் மாணவியை மதம் மாற வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை நேற்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.