அரக்கோணம் தொகுதி குருவராஜப்பேட்டையில் இந்தாண்டே புறவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதி குருவராஜப்பேட்டையில் இந்தாண்டே புறவழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார். பேரவையில் பேசிய அமைச்சர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலை மூலம் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒருவழிச் சாலைகள் இருவழிச் சாலையாகவும்,  இருவழிச் சாலைகள் நான்கு வழிச் சாலையாகவும் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: