குன்னூர்: குன்னூரில் சித்திரை திருவிழா முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒயிலாட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் தற்போது சொந்த பந்தங்கள் இணைந்து தங்களது கிராமங்களில் உள்ள ஆலயங்களில் திருவிழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.